Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கீத அவமரியாதை வழக்கு: மத்திய அமைச்சர் சசிதரூருக்கு எதிராக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கொச்சி: தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சர் சசிதரூருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?

கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, பார்வையாளர்களை அமெரிக்கர்களைப் போல வலது கையை மார்பில் வைத்துக் கொண்டு நிற்கக் கூறினார் என்பது புகார்.

சசி தரூரின் இந்த நடவடிக்கை தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலர் ஜாய் கைதாரத் எர்ணாகுளத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய சசி தரூர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்த் கேரள உயர்நீதிமன்றத்திலும் சசி தரூர் மனுத்தாக்கல் செய்தார். கேரள உயர்நீதிமன்றமும் சசி தரூரின் மனுவை நிராகரித்து விசாரணையை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், சம்பந்தபட்ட வீடியோ காட்சியை பார்த்து முடிவு செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். கடைசிவரை நான் நீதிமன்றத்தில் போராடுவேன் என்றார்.

சர்ச்சைக்கு மறுபெயர்தான் சசிதரூரோ!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+