பொதுமக்களை பலி கொடுத்தேனும் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியது இலங்கை அரசு: ஐ.நா. அதிகாரி

இலங்கை இறுதிப் போரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளதாவது:
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நடந்தது என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என்பதை ஏற்க முடியாது.
இறுதிப் போரில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து யாருக்கும் உறுதியான தகவல் தெரியாது. இதனால் ஐ.நா. மீது மட்டுமே முழு குற்றத்தையும் சுமத்துவது ஏற்புடையது அல்ல.
என்ன விலையை கொடுத்தாவது அல்லது பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற முடிவில் இலங்கை அரசு உறுதியாக இருந்தது. இந்தத் திட்டத்தை எந்த ஒரு நாடும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயல்பட்டது. உண்மையில் அப்போது மிகவும் சங்கடமான ஒரு நிலையில்தான் ஐ.நா. இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications