ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இன்று பிரதமர் மன்மோகன்சிங் விருந்து

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்னிய நேரடி முதலீடு விவகாரம் பெரும் புயலைக் கிளப்ப இருக்கிறது. அதுமட்டுமின்றி சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா மீதான ஊழல் புகார் உள்ளிட்ட விவகாரமும் அரசுக்கு கிலியை பெரும் ஏற்படுத்தக் கூடும்.
இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங் விருந்து அளித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் இன்று விருந்தளிக்க இருக்கிறார். இந்த விருந்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தற்போதைய எதிரியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அரசுக்கு எதிராக அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரக் கூடும் என்று தெரிகிறது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்களிப்புடன் கூடிய தீர்மானத்துக்கான நோட்டீஸை தாக்கல் செய்திருக்கின்றன. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் சார்பிலும் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்திருக்கின்றனர்.
இந்தியாவிலேயே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக இன்னமும் முடிவெடுக்காத ஒரே கட்சியாக திமுகதான் இருந்து வருகிறது. திமுகவோ 'சஸ்பென்ஸ்' யுக்தியை கடைபிடிக்கப்போவதாக அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications