இலங்கையில் 'தோல்வி அடைந்த' ஐ.நா.- சர்வதேச விசாரணை கோருகிறது த.தே.கூட்டமைப்பு
கொழும்பு: இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயல்பட தவறியது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் கூறுகையில், இறுதிப் போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. வன்னி பிரதேசத்தில் இருந்து ஐ.நா. அதிகாரிகள் வெளியேறிவிட்ட நிலையில் அங்கு யாருக்கும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழக்க நேரிட்டது.
ஐக்கிய நாடுகள் சபை இழைத்திருக்கும் இந்த தவறுகள் தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற விவகாரம் கடந்த சில நாட்களாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் சர்வதேச விசாரணை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது.












Click it and Unblock the Notifications