லேசான புல்லட் ப்ரூப்: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

விவிஐபிக்களுக்கு பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காக உடையை அணிவது வழக்கம். இதேபோல் குண்டு துளைக்காத கார், ராணுவ தளவாட அறைகள் போன்றவை குண்டுதுளைக்காக வகையில் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக தடிமனான உலோகங்களால் ஆனாவை. இதனால் இப்படியான உடைகளை அணிவது விவிஐபிக்களுக்கு சிரமமாக இருக்கும்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பிரிவு வல்லுனர்கள், தற்போது "நானோ" தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ருப் பொருளை தயாரித்துள்ளனர்.இது கண்ணாடி போன்று பளபளப்பாகவும், ரப்பரை போன்று வளையும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
இந்த மெல்லிய தன்மை வாய்ந்த புல்லட் ப்ருப் பொருள், துப்பாக்கி குண்டுகளை துளைக்க விடாமல் தடுப்பதை வெற்றிகரமாக சோதித்துள்ளனர். இது அதி அற்புதமான கண்டுபிடிப்பு என்று ரைஸ் ஸ்கூல் ஆப் இஞ்சினியரிங் டீன் நெட் தாமஸ் கூறியுள்ளார். இந்த புல்லட் ப்ரூப் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் எளிதாக உடை அணியலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.












Click it and Unblock the Notifications