வருமானம் போதவில்லை... வாழ வழியின்றி தவிக்கும் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்கள்!
போச்சம்பள்ளி: ஆந்திர மாநிலம் போச்சம்பள்ளியில் சேலை உற்பத்தியாளர்களுக்கு சரியான வருமானம் கிடைக்காத காரணத்தினால் சேலை உற்பத்தியை விட்டுவிட்டு மிதியடி, பெட்சீட், டேபிள் கவர் போன்றவைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் பிரசித்தி பெற்ற போச்சம்பள்ளி சேலைகள் அழியும் நிலையை எட்டியுள்ளன.

இதன்காரணமாக போச்சம்பள்ளி சேலை உற்பத்தியைவிட்டு விட்டு பாலியெஸ்டர் சேலை உற்பத்திக்கு மாறிவிட்டனர் என்கிறார் அவர்.
ஒரு சேலை உற்பத்தி செய்ய குறைந்த பட்சம் 3 நாட்களாவது ஆகும். ஆனால் கேற்ப கூலி கிடைப்பதில்லை. மாத வருமானம் வெறும் 3,500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. குடும்பம் மொத்தமும் உழைத்தாலும் மாத வருமானம் 8,000 ரூபாயை தாண்டுவதில்லை என்கிறார் நெசவுத் தொழிலாளி.
பாரம்பரியம் மிக்க இந்த சேலைகள் பிரசித்தி பெற்றவை. கலை நுணுக்கம் மிக்க இந்த சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விசைத்தறிகளின் வருகையினால் தங்களால் அவற்றுடன் போட்டி போட முடியாமல் நலிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். கைத்தறி நெசவாளர் சங்கமும் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என்று ஆதங்கப்படும் நெசவாளர்கள், தற்போது வருமானத்திற்காக பெட்கவர், மிதியடி, பெட்சீட் போன்றவைகளை நெசவு செய்யத்தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். இதில் ஓரளவிற்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.
போச்சம்பள்ளி சேலைகளுக்காக கோவை மற்றும் பெங்களூரு நகரங்களில் இருந்து பட்டு வாங்கி வந்து நெசவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் சீனா பட்டுக்களை வாங்கி வந்து விசைத்தறிகளில் நெய்து குறைவான விலைக்கு விற்றுவிடுகின்றனர் என்பது இவர்களின் ஆதங்கம்.
கைத்தறி நெசவில் குடும்பம் முழுவதும் உழைத்தாலும் 45 நாட்களில் வேலைப்பாடான போச்சம்பள்ளி சேலைகளை 7மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பெட்சீட், பெட்கவர்களை தனியாக அதிக அளவில் உற்பத்தி செய்யமுடிகிறது என்கின்றனர் இவர்கள்.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங்கால சமுதாயத்தினர் சேலை உற்பத்தி தொழிலையே மறந்து விடும் சூழல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சும் இந்த நெசவாளர்கள் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்களின் வாழ்வை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications