Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமானம் போதவில்லை... வாழ வழியின்றி தவிக்கும் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

போச்சம்பள்ளி: ஆந்திர மாநிலம் போச்சம்பள்ளியில் சேலை உற்பத்தியாளர்களுக்கு சரியான வருமானம் கிடைக்காத காரணத்தினால் சேலை உற்பத்தியை விட்டுவிட்டு மிதியடி, பெட்சீட், டேபிள் கவர் போன்றவைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் பிரசித்தி பெற்ற போச்சம்பள்ளி சேலைகள் அழியும் நிலையை எட்டியுள்ளன.

Pochampally's sari weavers struggle to survive
தமிழ்நாட்டில் சுங்குடி, கோவை காட்டன் சேலைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதேபோல ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள். ஆனால் இன்றைக்கு சேலை உற்பத்தியாளர்கள் சரியான வருமானம் கிடைக்காமல், உற்பத்தி செய்த சேலைகளை சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். காரணம் குறைந்த விலைக்கு கிடைக்கும் சேலைகளின் மக்களின் கவனம் திரும்பியுள்ளதே என்கிறார் சேலை உற்பத்தியாளர் பேரா கமலானா.

இதன்காரணமாக போச்சம்பள்ளி சேலை உற்பத்தியைவிட்டு விட்டு பாலியெஸ்டர் சேலை உற்பத்திக்கு மாறிவிட்டனர் என்கிறார் அவர்.

ஒரு சேலை உற்பத்தி செய்ய குறைந்த பட்சம் 3 நாட்களாவது ஆகும். ஆனால் கேற்ப கூலி கிடைப்பதில்லை. மாத வருமானம் வெறும் 3,500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. குடும்பம் மொத்தமும் உழைத்தாலும் மாத வருமானம் 8,000 ரூபாயை தாண்டுவதில்லை என்கிறார் நெசவுத் தொழிலாளி.

பாரம்பரியம் மிக்க இந்த சேலைகள் பிரசித்தி பெற்றவை. கலை நுணுக்கம் மிக்க இந்த சேலைகளை உற்பத்தி செய்யும் பணியில் 400க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விசைத்தறிகளின் வருகையினால் தங்களால் அவற்றுடன் போட்டி போட முடியாமல் நலிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். கைத்தறி நெசவாளர் சங்கமும் தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில்லை என்று ஆதங்கப்படும் நெசவாளர்கள், தற்போது வருமானத்திற்காக பெட்கவர், மிதியடி, பெட்சீட் போன்றவைகளை நெசவு செய்யத்தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர். இதில் ஓரளவிற்கு வருமானம் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

போச்சம்பள்ளி சேலைகளுக்காக கோவை மற்றும் பெங்களூரு நகரங்களில் இருந்து பட்டு வாங்கி வந்து நெசவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் சீனா பட்டுக்களை வாங்கி வந்து விசைத்தறிகளில் நெய்து குறைவான விலைக்கு விற்றுவிடுகின்றனர் என்பது இவர்களின் ஆதங்கம்.

கைத்தறி நெசவில் குடும்பம் முழுவதும் உழைத்தாலும் 45 நாட்களில் வேலைப்பாடான போச்சம்பள்ளி சேலைகளை 7மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால் பெட்சீட், பெட்கவர்களை தனியாக அதிக அளவில் உற்பத்தி செய்யமுடிகிறது என்கின்றனர் இவர்கள்.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங்கால சமுதாயத்தினர் சேலை உற்பத்தி தொழிலையே மறந்து விடும் சூழல் ஏற்பட்டு விடும் என்று அஞ்சும் இந்த நெசவாளர்கள் போச்சம்பள்ளி சேலை உற்பத்தியாளர்களின் வாழ்வை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+