நித்தியானந்தா சீடர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல்- மடத்தை அரசு எடுக்கிறது: மதுரை ஆதீனம்
Subscribe to Oneindia Tamil

ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அருணகிரிநாதர், நித்தியானந்தாவை நியமித்து நீக்கி பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. நித்தியானந்தாவால் பிரச்சனை இல்லை. ஆனால் அவரது சீடர்களால் அச்சுறுத்தல் இருக்கிறது.
மீண்டும் இளைய ஆதீனமாக இப்போது யாரையும் நியமிக்கப் போவது இல்லை. மதுரை ஆதீன மடத்தை அரசு கையகப்படுத்தலாம். தமிழக முதல்வரைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்சி நடத்துகிறார். போதுமான மின் உற்பத்தி இல்லாததால்தான் அவரால் மின்சாரத்தை கொடுக்க முடியவில்லை.
பால்தாக்கரேயின் இழப்பு இந்து சமுதாயத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றார் அவர்.












Click it and Unblock the Notifications