ஐயோ, இதுவேறயா.... 3 மாதத்தில் 5 வது முறை பழுதான தூத்துக்குடி அனல்மின் நிலையம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழுதை சரி செய்ய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்பதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலைமை உருவாகி இருக்கிறது.
தூத்தூக்குடி செயல்பட்டு வரும் அனல்மின் நிலையம் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு மொத்தம் 5 யூனிட்கள் உள்ளன.
கடந்த 3 மாத காலங்களில் 5 முறைக்கு பழுதை சந்தித்துவிட்டது தூத்துக்குடி அனல் மின்நிலையம் . தற்போது 3-வது யூனிட்டின் கொதிகலன் பகுதி குழாயில் நேற்று பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
தற்போது பழுதை சீரமைக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கெனவே மின்வெட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படியான மின்நிலையங்களும் பழுதடைந்துவிட்டால் மின்விநியோகத்தில் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும்.