For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயோ, இதுவேறயா.... 3 மாதத்தில் 5 வது முறை பழுதான தூத்துக்குடி அனல்மின் நிலையம்

By Mathi
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழுதை சரி செய்ய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்பதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலைமை உருவாகி இருக்கிறது.

தூத்தூக்குடி செயல்பட்டு வரும் அனல்மின் நிலையம் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு மொத்தம் 5 யூனிட்கள் உள்ளன.

கடந்த 3 மாத காலங்களில் 5 முறைக்கு பழுதை சந்தித்துவிட்டது தூத்துக்குடி அனல் மின்நிலையம் . தற்போது 3-வது யூனிட்டின் கொதிகலன் பகுதி குழாயில் நேற்று பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

தற்போது பழுதை சீரமைக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கெனவே மின்வெட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படியான மின்நிலையங்களும் பழுதடைந்துவிட்டால் மின்விநியோகத்தில் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும்.

English summary
Power generation in the third unit of 5 X 210 MW Tuticorin Thermal Power Station (TTPS) was stopped on Monday evening due to a “technical snag.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X