திமுக எம்பி ரித்தீஷ் மீது ஹோட்டல் அதிபர் ரூ.20 கோடி நில மோசடி புகார்
Subscribe to Oneindia Tamil

சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.சாலையில் வசித்து வரும் தொழிலதிபரான ராஜசேகர் சென்னையில் பிரபலமான ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு தந்தார்.
அதில், 2006ம் ஆண்டு எனது தந்தை முருகேசனிடம் ரித்தீஷ் எம்.பி. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 20 கோடி வாங்கினார். ஆனால் கூறியப்படி நிலத்தை வாங்கித் தரவில்லை.
இதற்கிடையே எனது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு நான் சென்று அவரிடம் பணம் கேட்டேன். அப்போது வேறு பகுதியில் இடம் வாங்கி தருகிறேன் என்றார். நானும் ஒப்புக் கொண்டேன்.
ஆனால் இதுவரை இடமும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications