உறவினருக்கு அரசு நிலத்தை வழங்கிய வழக்கு: அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்ப்பு
திருவனந்தபுரம்: தனது உறவினர் ஒருவருக்கு அரசு நிலத்தை வழங்கிய வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள எதிர்கட்சி தலைவரான அச்சுதானந்தன் கடந்த 2006-2011ல் முதல்வராக இருந்தார். அப்போது காசரக்கோட்டைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆட்சி மாறியதும் இது தொடர்பாக அச்சுதானந்தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை கோழி்க்கோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கேரள அரசு சார்பில் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது,
காசரக்கோட்டைச் சேர்ந்த உறவினருக்கு அச்சுதானந்தன் அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்து விட்டது. இது தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கில் அச்சுதானந்தன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்பட மேலும் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு்ள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications