2ஜி நஷ்ட கணக்கு: சிஏஜி-பாஜக தொடர்புகள் அம்பலமாகிவிட்டன- சோனியா

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கணக்கு என்பதும், இதில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பங்கு உள்ளதையும் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் சுட்டிக் காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந் நிலையில் இன்று காங்கிரஸ் மத்தியக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்தில் பாஜகவின் சாயம் வெளுத்துவிட்டது என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத், ஆர்.பி. சிங் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் சீரியசானவை. சிஏஜி வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியின் செயல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதிப்போம் என்றார்.
அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான மணீஷ் திவாரி கூறுகையில், ஜோஷி மீதும் சிஏஜி மீதும் ஆர்.பி. சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இதற்கு முரளி மனோகர் ஜோஷி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றார்.
காங்கிரஸ் மூத்த எம்பி பி.எல்.புனியா கூறுகையில், அரசியல் ஆதாயத்துக்காக பாஜக எந்த அளவுக்கும் போகும் என்பதைத் தான் இந்த விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட சிஏஜி அலுவலகத்தையே தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிஏஜி அலுவலக அதிகாரிகளை நெருக்கடிக்கு ஆளாக்கி, வேண்டியதை சாதித்துள்ளனர். இது குறித்து ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும். முழு உண்மையும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
இடதுசாரிகளும் கடும் தாக்கு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா கூறுகையில், சிஏஜியின் அறிக்கையையே திரிக்கும் அளவுக்கு முரளி மனோகர் ஜோஷியின் செயல்பாடுகள் இருந்தன என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இதற்கு அவர் நிச்சயம் பதில் சொல்லிவே ஆக வேண்டும் என்றார்..
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications