திமுகவின் போராளி வீரபாண்டி ஆறுமுகம்: வைகோ உருக்கம்!
சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மறைவு திமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மிகப்பெரிய போராளியை திமுக இழந்து தவிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வெள்ளிக்கிழமை காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த ஊரான பூலாவரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர்களும், தொண்டர்களும் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை பூலாவரிக்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீரபாண்டி ஆறுமுகம் வாழ்நாள் முழுவதும் போராளியாக திமுகவுக்கு உழைத்தவர் என்றார். பல சோதனைக் காலங்களில் திமுகவுக்கு அரனாக இருந்தவர். அவரது மறைவின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய சேனாதிபதியை இழந்து விட்டது என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications