தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் என்ன தான் நடக்கிறது: மீண்டும் பழுதாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்கள் உள்ளன. அவற்றில் இருந்து தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த 5 யூனிட்களுமே மிகவும் பழையதாகிவிட்டது. இதனால் அவை அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. கடந்த 6 மாதங்களாக அந்த 5 யூனிட்களில் தீ விபத்து, தொழில்நுடப்க் கோளாறும் மாறி மாறி ஏற்பட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின்பற்றாக்குறை உள்ள நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலைய்ததில் அடிக்கடி பழுது ஏற்படுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள 5வது யூனிட்டின் கொதிகலனில் இன்று காலை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த யூனிட்டில் இருந்து கிடைக்கும் 210 மெகாவாட் மின்சாரம் கிடைக்காது. அனல் மின் நிலைய என்ஜினியர்கள் பழுதை சரி செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் பழுது பார்க்கும் பணி முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் 3வது யூனிட்டில் பழுது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications