'ஜெய் தெலுங்கானா' கோஷம் ஏன் போடலை? - கொந்தளித்த டி.ஆர்.எஸ். தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

Sharmila
மகபூப்நகர்: ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகனின் சகோதரி ஷர்மிளா மேற்கொண்டு வரும் பாதயாத்திரையால் மகபூப் நகர் வத்தபெல்ல பகுதியில் ரகளை ஏற்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெகன் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஜெகனின் சகோதரி ஷர்மிளாவும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். செல்லும் இடமெல்லாம் ஷர்மிளாவுக்கும் கூட்டம் திரள்கிறது. அதிரடியாக தெலுங்கானா பிரதேசத்துக்குள்ளும் பிரவேசித்திருக்கும் ஷர்மிளாவினால் பதற்றம் உருவாகியுள்ளது.

தெலுங்கானா விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஷர்மிளாவின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளுக்கு வாக்களித்தால் ஹைதராபாத்துக்கு போக பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்று சொன்னவர். அதேபோல் தெலுங்கானாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம் போட்டு பதாகை ஏந்தியவர் ஜெகன்.

இதனால் ஷர்மிளாவின் பாதயாத்திரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மகபூப் நகரில் பாதயாத்திரை மேற்கொண்டுவரும் ஷர்மிளா, வத்தபெல்ல பிரதேசத்துக்கு சென்ற போது அவரை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் சூழ்ந்து கொண்டனர். அவரை ஜெய் தெலுங்கானா கோஷம் போட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். ஷர்மிளாவும் பொதுக்கூட்ட முடிவில் அபடியே கோஷம் போடுவதாகக் கூறினார். ஆனால் அப்படி ஏதும் கோஷம் போடாததால் கடுப்பாகிப் போன தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் ஷர்மிளாவை சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்ப அந்த இடமே களேபரமாகிப் போனது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரை ஒய்.எஸ்.ஆர். தொண்டர்கள் நையப் புடைத்துவிட்டனர். பினன்ர் போலீசார் அங்கு வந்து தெலுங்கா ராஷ்டிரிய சமிதி கட்சியினரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+