காவிரி பிரச்சனை: கர்நாடக முதல்வரை சந்திக்க 29ம் தேதி பெங்களூர் செல்லும் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalithaa and Jagadish Shettar
சென்னை: காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 29ம் தேதி பெங்களூர் செல்கிறார்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவில் நடப்பு சம்பா சாகுபடிக்கான தண்ணீரை உடனே கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது.

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து இம்மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் விவசாயிகளின் நலன் கருதி தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 29ம் தேதி பெங்களூர் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+