சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளராக சிவலிங்கம் நியமனம்: வீரபாண்டியார் மகன் அதிருப்தி
சென்னை: சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மறைந்ததையடுத்து அந்த மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏவான இவர் இதுவரை திமுக மாவட்ட துணைச் செயலராக இருந்தார்.
இந் நிலையில் இவரை சேலம் மாவட்ட பொறுப்பாளராக கட்சித் தலைமை நியமித்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான ராஜா என்கிற ராஜேந்திரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை ஒடுக்கி வைக்க பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை திமுக பொருளாளர் ஸ்டாலின் வளர்த்து விட்டார். இந்த இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கமாக இருந்தது.
ராஜேந்திரனை ஸ்டாலின் வளர்த்துவிட்டதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறியதும் கூட நடந்தது.
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவயடுத்து இந்தப் பதவிக்கு அவரது மகன் ராஜா குறி வைத்தார். ஆனால், எஸ்.ஆர்.சிவலிங்கத்தை பொறுப்பாளராக நியமித்துவிட்டது திமுக தலைமை.












Click it and Unblock the Notifications