சரக்கு போட்டு வண்டி ஓட்டிய இளைஞருக்கு டெல்லியில் நூதன தண்டனை
டெல்லி: டெல்லியில் நன்றாக குடித்துவிட்டு வண்டி ஓட்டிய இளைஞருக்கு டெல்லி நீதிமன்றம் நூதன தண்டனை விதித்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராவத், கடந்த மாதம் 8-ந் தேதியன்று குடித்துவிட்டு வண்டி ஓட்டி சிக்கினார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் திடீரென 5 நாள் சிறைத் தண்டனைக்கு பதிலாக வித்தியாசமான ஒரு தண்டனை வழங்கப்பட்டது.
தினந்தோறும் காலை 10 மணிக்கு காவல்துறை துணை ஆணையரிடம் ஆஜராகி, தென்மெற்கு டெல்லியின் பரபரப்பான சாலையில் போலீசாருடன் இணைந்து சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாலை 5 மணிக்கு மீண்டும் காவல்துறை துணை ஆணையரிடம் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்பதுதான் அந்த நூதன தண்டனை.
இன்று முதல் இந்த நூதன தண்டனை அமலுக்கு வருகிறது.,இது குறித்துக் கூறிய நீதிபதி, ஒரு நாகரிக சமுதாயத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனைப் படித்துக் கொள்ளும் களமாக போக்குவரத்து சிக்னலை அவன் பயன்படுத்தட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications