விஐபி பக்தர்கள் ஏழுமலையானை இனி அருகில் போய் தரிசிக்கலாம்!
திருப்பதி: திருமலை வெங்கடேசப் பெருமாளை விஐபி பக்தர்கள் அருகில் சென்று தரிசிக்கும் முறை நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏழுமலை மீது அமர்ந்து அருள்தரும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிகிறார்கள். இலவச தரிசனம் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி தரிசிக்கும் விஐபி பக்தர்களும் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர். இவர்களில் வி.ஐ.பி. டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் மூலஸ்தானத்தில் இருந்து 10 அடி தொலைவில் உள்ள குலசேகரன் படியில் நின்று தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 30ஆண்டுகளாக இது நடைமுறையில் இருந்து வந்தது.
மூன்று பிரிவான விஐபி தரிசனம்
இந்த நிலையில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வி.ஐ.பி.களுக்கு சிறப்பு தரிசனம் செய்ய 3 பிரிவாக பிரித்தனர். இதில் ஜனாதிபதி, பிரதமர், முதல்-மந்திரி, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் போன்ற அதிக முக்கியமான பக்தர்களை மட்டும் குலசேகரன்படி வரை அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு உருவானது. 500ரூபாய் கட்டணம் செலுத்தியும் தங்களுக்கு திருப்தியான தரிசனம் கிடைக்கவில்லை என்று தேவஸ்தான அதிகாரியிடம் புகார் கூறினார்கள். இதையடுத்து அவர் வி.ஐ.பி. பக்தர்கள் அனைவரையும் குலசேகரன் படி வரை அனுமதிக்க உத்தரவிட்டார். வியாழக்கிழமை முதல் இந்த முறை அமுலுக்கு வந்தது.
முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்குவது என்றும் மற்றவர்களுக்கு தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்க நடைமுறை படுத்தப்பட்டுள்ளதால் இனிமேல் வி.ஐ.பி. பக்தர்களும் ஏழுமலையானை அருகில் நின்று தரிசிக்கலாம்.












Click it and Unblock the Notifications