30000 திருமணங்களால் டிராபிக் ஜாம்… நெரிசலில் திணறிய டெல்லி
டெல்லி: புதுடெல்லியில் இருந்து குர்கானுக்கு வெள்ளிக்கிழமை சென்ற வாகன ஓட்டிகள் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறினர். அதற்குக் காரணம் ஒரே நாளில் 30000 திருமணங்கள் நடைபெற்றதுதானம்.
புது டெல்லியின் தெற்குப் பகுதியில் இருந்து இந்திரா காந்தி விமானநிலையம் செல்ல குறைந்த பட்சம் ஒருமணிநேரம் ஆனது. மிகநீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள். மெதுவாக ஊர்ந்து சென்றன.
குர்கான் சாலையில் இரவு வரை போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. குர்கான் அதிவேக சாலையில் சென்ற வாகனங்கள் டெல்லியில் இருந்து டோல்ப்ளாசாவை கடக்கவே ஒரு மணிநேரம் எடுத்துக்கொண்டனவாம்.
இந்த போக்குவரத்து நெரிசலைவைத்து ட்விட்டரில் கும்மியடித்துவிட்டனர். குர்கான் மற்றும் டெல்லியில் மிகமோசமான ட்ராபிக் ஜாம் என்றது ஒரு ட்வீட்.
அதேபோல 30000 திருமணங்கள் டெல்லியில் நினைத்து பார்க்கவே முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது டெல்லி என்கிறது ஒரு ட்வீட். டெல்லி - நொய்டா - டெல்லி டோல்கேட் சாலையில் தெற்கு டெல்லி வந்தவர்கள் மிகப்பெரிய ட்ராபிக்கில் சிக்கி திணற நேரிட்டது என்றும் நேற்று முழுவதும் ட்விட்டரில் ஒரே ட்ராப்பிக் ஜாம் மேட்டர்தான்.












Click it and Unblock the Notifications