சென்னை மாம்பலம் ரயில் நிலைய குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு?
Subscribe to Oneindia Tamil

சென்னையின் மையப்பகுதியான தியாகராயர் நகர்தான் பிரதான வர்த்தகப் பகுதி. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம். இந்த தியாகராயர் நகரில் இருக்கும் மாம்பலம் ரயில் நிலையத்தில் குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட பொருளை சோதனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அது செயலிழந்த பைப் வெடிகுண்டு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு அலுவலகம் அருகேயே இதுபோன்ற வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications