ரத்தக்காட்டேரி பீதி: பாக்கெட்டில் வெள்ளைப் பூண்டுடன் சுற்றும் கிராமத்தினர்

மேற்கு செர்பியாவில் மலை குன்றுகளுக்கும், அடர்ந்த காடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய கிராமம் ஜரோஜீ. அந்த கிராமத்தில் ரத்தக்காட்டேரி ஒன்று உலாவி வருவதாக மக்கள் நம்புகின்றனர். இதையடுத்து ரத்தக்காட்டேரியிடம் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்திருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
செர்பியாவில் கூறப்படும் சவா சவானோவிக் என்னும் ரத்தகாட்டேரி வெறும் கட்டுக் கதை என்பது மக்களுக்கு தெரிந்தும் அதை நம்ப மறுக்கின்றனர். ஒரு வேளை ரத்தக்காட்டேரி நிஜமாகவே இருந்து எங்களை பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுகின்றனர்.
இதனால் அனைவரும் தங்கள் பாக்கெட்டுகளில் வெள்ளைப் பூண்டும், அறைகளில் சிலுவையும் வைத்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள ஓக் மர காடுகளுக்கு நடுவே இருந்த மில்லில் தானியங்களை அரைக்க வந்தவர்களின் ரத்தத்தை சவானோவிக் குடித்துவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரத்தால் ஆன அந்த மில் இடிந்து விழுந்தது. இதனால் சவானோவிக் வேறு இடம் தேடி அலைவதாக கிராமத்தினர் நம்புகின்றனர்.
ரத்தக்காட்டேரி காட்டில் நடக்கும் சத்தம் கூட கேட்பதாக கிராமத்தினர் சிலர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications