சென்னை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: நள்ளிரவில் கனமழை
Subscribe to Oneindia Tamil

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையில் இன்று முதல் மழை பெய்யும் என்று ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை நகரில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னை நகரிலும் புறந்கரிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், நாகப்பட்டினத்திலும் பரவலான மழை பெய்துள்ளது.
சென்னை நகரில் நள்ளிரவில் மழை கொட்டித் தீர்த்தாலும் காலையில் வழக்கம்போல 'வெயில்' சுல்லென சுட்டெரிக்கவே செய்தது.












Click it and Unblock the Notifications