"ஈழத் தமிழகம்" அமையாது போனதற்கு காரணம் தமிழர் ஒற்றுமையின்மையே- கருணாநிதி

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பேசுகையில்,
பெரியாருக்கு பின்னர் அவரது 'சொத்து'களையும், கொள்கைகளையும் வீரமணி பாதுகாத்து வருகிறார். 1949-ம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் நடந்த தி.மு.க. அறிமுக கூட்டத்தில் பேசிய அண்ணா, இந்த இயக்கம் பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் எதிரானது அல்ல. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இயங்கும் என்றார்.
அழகிரிக்கு கட்டாய கல்யாணம்
திராவிடம் என்பதை வீழ்த்தியே தீருவோம், அந்த வார்த்தை எங்கள் சாதிக்கு விரோதமாக உள்ளது என்கின்றனர். என் மகன் அழகிரி ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று தகவல் அனுப்பினான். ஆனால் காந்தி என்கின்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை திட்டமிட்டு திருமணம் செய்து வைத்தேன்.
ஈழத் தமிழரும் திமுகவும்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 1961-ம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இப்போது ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம்.
ஈழத் தமிழகம்
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடிய போதே ஈழத்தமிழகம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஈழத்தமிழகம் கிடைக்கவில்லை. எனவே ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட டெசோ அமைப்பு முயற்சித்து வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications