அழகு ராணியே. விவரிக்க வார்த்தையே இல்லை...: பார்லி.யில் எம்.பியை பற்றி இலங்கை அமைச்சர் வர்ணிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி எம்.பியான ரோசி சேனநாயக்க கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க எழுந்த இலங்கையின் போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார வெல்கம, நீங்கள் மயக்கும் வசீகரமும் பேரழகும் கொண்டவர். அழகு ராணியான உங்களின் கேள்விக்கு பதிலளிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் எவ்வளவு வசீகரமான பெண். என் உணர்வுகளை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது உணர்வுகளை இங்கு விளக்க முடியாது. நீங்கள் வெளியே வந்து என்னை சந்தித்தால் நான் அதை விவரிக்கிறேன் என்று "ஜொல்"விட்டுப் பேச அவையே களேபரமானது.
எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொந்தளித்தனர். "ஒரு பெண் என்ற வகையில் தமது வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு அமைச்சர் கருத்து கூறியிருக்கக்கூடாது. 'நான் இதை அவமானமாக கருதுகிறேன். எனது பெண்மை பற்றியும் வெளித்தோற்றம் பற்றியும் அமைச்சர் பேசியிருக்கக் கூடாது" என்று ரோசி சேனநாயக்காவும் சீறினார்.
அப்போதும் அடங்காத அமைச்சர் வெல்கம, 'நான் பெண்களை அவமானப்படுத்த மாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும்' என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications