நினைத்ததை முடிப்பவர் நரேந்திர மோடி: அண்ணன் சோமாபாய் மோடி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நினைத்ததை முடிப்பவர் என்று அவரது அண்ணன் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நரேந்திர மோடி குஜராத்திற்காக உழைப்பதை வேறு எந்த மாநில முதல்வர்களுடனும் ஒப்பிட முடியாது. மேலும் மோடி முதல்வராக செய்து வரும் பணியை குஜராத்தின் வேறு எந்த முதல்வர்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அவருக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது. அதனால் மக்கள் அவரை மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக்கிப் பார்ப்பார்கள்.
நரேந்திர மோடி சிறு வயதில் இருந்தே ஒழுக்கமானவராக உள்ளார். அவர் எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்துவிடுவார். சிறுவனாக இருக்கும்போதே மோடிக்கு பயம் கிடையாது. ஒரு முறை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மோடி வழியில் உள்ள குளத்தில் இருந்து ஒரு சின்ன முதலையை தூக்கிக் கொண்டு வந்தார். ஆனால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று எங்கள் அம்மா கூறிவிட்டதால் அதை அவர் வளர்க்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications