நாயை கடித்து தலைப்புச் செய்தியான ஆஸ்திரேலிய வாலிபர்
நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவில் போலீஸ் நாயுடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு கடித்து குதறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்தி நிறுவனங்களில் புதிதாக பணிக்கு சேரும் நிருபர்களுக்கு செய்தி ஆசிரியர் கூறும் அறிவுரைகளின் முதன்மையானது "மனிதனை நாய் கடித்தால் செய்தியல்ல, அதுவே நாயை மனிதன் கடித்தால் அது தலைப்புச் செய்தி" என்பதுதான். அப்படியொரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது
ஆஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இலவாரா பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அருகில் அழைத்தனர். போலீஸ் அருகே வந்தபோது அந்த நபரைப் பார்த்து போலீஸ் நாய் விடாமல் குரைத்தது. இதனால் அந்த நபர் கடும் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து ஆவேசமாக குரைத்த அந்த நாயின் மேல் பாய்ந்து அதனைக் கடித்தார். நாயும் வாலிபர் மீது கோபமாக பாய்ந்தது. இருவரும் கட்டிப் புரண்டதில் நாயும் அந்த வாலிபரின் தோளில் கடித்து குதறியது. நாயை கடித்த குற்றத்துக்காக அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications