தேர்வில் காப்பியடித்து சிக்கியதால் பெங்களூர் மாணவி 3வது மாடியில் இருந்து குதித்தார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள புனித ஜோசப் பி.யூ. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவி தேர்வின்போது காப்பியடித்து சிக்கியதால் கல்லூரி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ளது புனித ஜோசப் இந்தியன் காம்போசிட் பி.யூ. கல்லூரி. அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வருபவர் 18 வயதாகும் பாவனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று இயற்பியல் தேர்வு எழுதிய பாவனா காப்பியடித்துள்ளார். அப்போது அந்த வகுப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் அவரைப் பிடித்துள்ளார். உடனே இது குறித்து துணை முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரோ பாவனாவை தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த பாவனா கல்லூரி கட்டிடத்தின் 3வது மாடிக்கு சென்று அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பாவனாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவி்டடார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications