எதியூரப்பா ஆதரவு- கர்நாடகா அமைச்சர், எம்.பி. மீது பாஜக நடவடிக்கை

பாரதிய ஜனதாவில் இருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் எதியூரப்பா நாளை தமது கர்நாடக ஜனதா கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கிறார். ஹவேரியில் இதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
எதியூரப்பா நாளை கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக கணிசமான எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், எம்.எல்.சிக்களும் பாஜகவில் இருந்து விலகக் கூடிய நிலை இருக்கிறது.
இதனால் டெல்லியில் கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநில பாஜக தலைவர்கள், கட்சித் தலைவர் நிதின் கத்காரியுடன் ஆலோசனை நடத்தினர் .இந்த ஆலோசனை இன்று பிற்பகல்தான் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர், அமைச்சர் புட்டசாமி, எம்.பி. பசவராஜ் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கின்றனர் என்று அறிவித்தனர்.
பாரதிய ஜனதா தொடங்கியிருக்கும் இந்தக் களையெடுப்புப் பட்டியல் அனைவரும் எதிர்பார்ப்பது போல் மிக நீளமாக இருக்குமா? அல்லது எதியூரப்பாவின் கனவைத் தகர்ப்பது போல் இருக்கும? என்பதுதான் கர்நாடகாவில் ஹாட் டாப்பிக்!












Click it and Unblock the Notifications