பூரி விவகாரம்: சேலம் சிறையில் அதிரடி சோதனை… செல்போன், பணம் பறிமுதல்
சேலம்:சேலம் மத்திய சிறையில் இன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன்கள், பணம், கஞ்சா,பீடி, சிகரெட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் உயரமான கட்டிடங்களில் ஏறிக் கொண்டு, பூரி தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சிறைக் கைதிகளிடம் செல்போன்கள் இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருப்பதாகவும் தகவல் தெரியவந்தது.
சேலம் மத்திய சிறையில் தொடர்ந்து ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு தீவிர சோதனை நடத்த சிறைத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று வடக்கு உதவி கமிஷனர் தங்கத்துரை தலைமையில் அனைத்து உதவி கமிஷனர்கள், மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அதிகாலை 5-30 மணிக்கு மணிக்கு சிறைக்குள் புகுந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சிறைகைதிகளிடம் இருந்து 2 செல்போன, ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 6 சிம்கார்டு, 151 பீடி, 49 சிகரெட், 10 கிராம் கஞ்சா, 2 சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை, கோவை சிறைகளிலும் இதேபோன்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications