உ.பி. முதல்வர் அகிலேஷ் விழாவில் கறுப்பு உடைக்கு தடை!
பிஜ்னோர்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கறுப்பு நிற உடையோ அல்லது ஜீன்ஸ் உடையோ அணிந்துவரக் கூடாது என்று பிஜ்னோர் மாவட்ட ஆட்சித் தலைவரான சரிகா மோகன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பிஜ்னோர் மாவட்டத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக அகிலேஷ் யாதவ் இன்று செல்கிறார். மாணவிகள் தங்களது கல்வியைத் தொடர்வதற்காக தலா ரூ30 ஆயிரம் நிதி உதவி வழங்கும் விழாவும் இன்றைய நிகழ்ச்சியில் அடக்கம்.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய சரிகா மோகன், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கறுப்பு உடைகளை பெண்கள் அணிந்துவரக் கூடாது. துப்பட்டா கூட கறுப்பாக இருக்கக் கூடாது. ஜீன்ஸ் உடைகளையும் பெண்கள் அணியக் கூடாது. பெற்றோர்கள் கூட சாதாரண உடைகளைத்தான் அணிய வேண்டும். நகைகள் அணிந்து வரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.
இது பெண்களிடத்தில் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. பிஜ்னோர், ராம்பூர் ஆகிய மாவட்டங்களில் இஸ்லாமியர்களே அதிகம். அகிலேஷின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டோரில் இஸ்லாமிய பெண்களும் அடக்கம். இவர்கள் அணிவது பெரும்பாலும் கறுப்பு நிற பர்தாதான். இப்படி ஒரு உத்தரவைப் போடுவது என்பதே அந்தப் பெண்களை அந்த நிகழ்ச்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கா? என்ற கேள்வியும் எழும்பியிருக்கிறது. மாவட்ட மாணவிகள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை இந்த உத்தரவு உருவாக்கியிருக்கிறது.
பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டப்பட்டதன் எதிரொலியாகத்தான் அகிலேஷை பாதுகாக்க இப்படி உத்தரவு போட்டாரம் மாவட்ட ஆட்சியர் சரிகா மோகன்!












Click it and Unblock the Notifications