லோக்சபாவில் பதிலளிக்க வராத சரத்பவார்- கோபத்தில் திமுக வெளிநடப்பு
டெல்லி: தென்னை விவசாயிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்க வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் வராமல் இணை அமைச்சர் பதிலளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோக்சபாவில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் இன்று பேசிய திமுகவின் எம்.பி. டி.ஆர். பாலு, தென்னை மரங்களை புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கி வருவதால் தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது. மேலும் போதுமான நீர், மின்சாரம் இல்லாததாலும் இடுபொருட்களின் விலை அதிகரித்திருப்பதாலும் தமிழகத்தின் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லை என்றார்.
டி.ஆர்.பாலுவின் இந்த கேள்வியை அதிமுகவினரும் ஆதரித்திருந்தனர். இதற்கு வேளாண் துறை இணை அமைச்சர் எழுந்து பதிலளித்தார்.
ஆனால் மிக முக்கியமான இந்த விவகாரத்தில் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்தான் பதிலளிக்க வேண்டும்.. ஆனால் இணை அமைச்சர் எப்படி பதிலளிக்கலாம்? என்று கோபப்பட்ட டி.ஆர்.பாலு, திமுக எம்.பிக்களுடன் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications