9 மாதங்களில் ரயில்வே டிராக்கில் 15,934 பேர் பலி: ரயில்வே அமைச்சகம்
டெல்லி: ரயில்வேத் துறை என்னதான் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கடந்த 9 மாதங்களில் 15,934 பேர் ரயில் பாதையில் நடந்த விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு ரயில் பாதையில் நடந்த விபத்துகளில் 14,611 பேர் பலியாகினர். ஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில் 15,934 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஆளில்லா ரயில்வே கேட்டுகளை கடக்கையில் ரயில் மோதி 202 பேர் இறந்தனர். இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கையில் ரயில் மோதி 71 பேர் இறந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் 13,530 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே அமைச்சகம் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அப்படியும் ரயில்வே கிராசிங்கில் ரயில் மோதி இறப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications