இலங்கையால் கைது செய்யப்பட்ட 40 தமிழக, காரைக்கால் மீனவர்கள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
திருகோணமலை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
கோடியக்கரை அருகே கடந்த 3-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை, திருகோணமலை அருகே புல்மோட்டையில் மீன்பிடித்தனர் என்று கூறியது.
கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று 40 பேரையும் விடுவித்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications