சென்னை: பேருந்து படியில் தொங்கி பயணித்த மாணவர்கள் 4 பேர் பலி
சென்னை: சென்னையை அடுத்த பெருங்குடியில் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த 4 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் இருந்து தியாகராயர் நகருக்கு 519-ம் எண் பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. காலை 8 மணியளவில் சென்னை பெருங்குடி லைப் லைன் மருத்துவமனை அருகே பேருந்து வந்த போது ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டிருக்கிறார். இதில் பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்கள் அப்படியே கீழே விழுந்திருக்கின்றனர்.
கீழே விழுந்த மாணவர்கள் மீது பேருந்துக்கு பின்புறமாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியது. இதில் படுகாயமடைந்த நிலையில் மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பேருந்து விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் பாலிடெக்னிக் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பேருந்து மோதியதில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications