காவிரி: தமிழகம் - கர்நாடகா இடையேயான வாகனப் போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்: காவிரி நதிநீர் விவகாரத்தால் தமிழக -கர்நாடகா இடையே 4-வது நாளாக போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்திலிருந்து திம்பம் மலை, மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை, நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பாதைகளின் வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லைகளிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன. ஆனால் ஓசூர் வழியிலான பாதையில் போக்குவரத்து வழக்கம் போல் செயல்பட்டு வந்தது,

தமிழக அரசுப் பேருந்துகளும் கர்நாடக அரசுப் பேருந்துகளும் இரு மாநில எல்லைகள் வரை மட்டுமே இயக்கப்பட்டன. தமிழகப் பயணிகள் கர்நாடகப் பேருந்துகளிலும், அதேபோல, கர்நாடகப் பயணிகள் தமிழகப் பேருந்துகளிலும் ஏறிச் சென்றனர்.

இதனிடையே கர்நாடகாவில் தமிழக லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் தணிந்ததாலும், சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் அமைதி நிலை திரும்புவதாலும், நேற்று மாலை 6 மணியளவில் தமிழக எல்லைப் பகுதியான தாளவாடிக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+