டிஜிபி ராமானுஜம் பதவிநீட்டிப்புக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராமானுஜத்தின் பதவி நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராமானுஜத்தின் பதவியை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராமானுஜத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், 7 கூடுதல் டிஜிபிக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு திங்களன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வி.சுப்ரமணியன், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications