கேஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை 6-லிருந்து 9: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம்

மானிய விலையில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இதன்படி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்களுக்குப் பதிலாக 9 சிலிண்டர்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி செவ்வாய்கிழமை அறிவித்தார்
இதனைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், "கூடுதல் சிலிண்டர் வழங்குவது குறித்து முடிவு எடுப்பதாக இருந்தால், அதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், குஜராத்திலும், இமாசலப் பிரதேசத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், கூடுதல் சிலிண்டர் வழங்குவது தொடர்பாக பேசியது குறித்து புதன்கிழமை காலை 11 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று மொய்லி கூறுகையில், சிலிண்டர்களை 9 ஆக உயர்த்துவது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications