உல்லாசமாக இருந்ததைப் பார்த்ததால் ஆத்திரம்.. மருமகள் மீது ஆசிட் அடித்த மாமனாரின் கள்ளக்காதலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாமனாரும், அவரது கள்ளக்காதலியும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டார் மருமகள். இதை ஊரெல்லாம் அவர் பரப்பவே ஆத்திரமடைந்த அந்தக் கள்ளக்காதலி மருமகள் மீது ஆசிட் அடித்து விட்டார்.
புதுகோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். குமாரின் மனைவி கோகிலா. மகாராஜனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இது அரசல் புரசலாக மருமகள் கோகிலாவுக்குத் தெரிய வந்தது.
இந்த நிலையில் மாமனாரும், மணிமேகலையும் ஒரு நாள் தனிமையில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை கோகிலா நேரில் பார்த்து விக்கித்துப் போய் விட்டார். அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினருடன் மணிமேகலை குறித்து அவர் தகவல் பரப்பினார். இதைக் கேட்டு மணிமேகலை ஆத்திரமடைந்தார்.
கோகிலாவுடன் சண்டைக்கு வந்தார் மணிமேகலை. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது மணிமேகலை தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆசிடை எடுத்து கோகிலா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்தார் கோகிலா. அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிமேகலையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications