ராமர் படம் போட்ட சேலையை மார்பில் அணிவதா.. குஷ்புவைக் கண்டித்து போராட்டம்
சென்னை: ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தைப் போதித்த ராமர் உள்ளிட்ட கடவுள்களின் படங்கள் இடம் பெற்ற சேலையை மார்பில் போர்த்திக் கொண்டு பொது விழாவுக்கு வருவதா என்று கூறி நடிகை குஷ்புவைக் கண்டித்து நாகர்கோவிலில் இன்று இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில்,நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.
அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில், வட சேரி சந்திப்பில் கண்டன போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications