தொடர்ந்து சீண்டினால் 'ஒட்டுமொத்த' ராஜினாமாதான்: எதியூரப்பா எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
மண்டியா: பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்தும் தம்மை சீண்டினால் தமது ஆதரவாளர்கள் கூண்டோடு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்று கர்நாடக ஜனதா கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் எதியூரப்பா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, கர்நாடகாவில் எனது ஆதரவுடன் கூட்டணி அரசு நடைபெறுகிறது. எனது தயவில்தான் பாஜக ஆட்சி நீடிக்கிறது. ஆனால் பாஜக தலைவர்கள் சீண்டி வருகின்றனர். நான் போட்ட பிச்சைதான் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானது. இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியதிருக்கும்.
இன்னும் 2 நாட்களில் எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications