உச்சநீதிமன்றத்தில் ஒரே நாளில் 95 வழக்குகளில் விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி!
Subscribe to Oneindia Tamil

உச்ச்நீதிமன்ற நீதிபதியான ஸ்வதந்தர் குமார், டிசமர் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். ஆனால் 17-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இதனால் தனது கடைசி பணிநான நேற்று தமது முன்பு இருந்த அனைத்து வழக்குகளையும் விரைவாக விசாரிக்கத் தொடங்கினார்.
அப்படி இப்படியென வழங்கி தீர்ப்பு சொல்லி முடித்தபோது மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 95!
இதில் முக்கியமானதாக அமர்நாத் யாத்திரை செல்கிற பக்தர்களுக்கு வசதிகளைக் கொடுப்பது தொடர்பான வழக்கும் அடக்கம்!
ஒரே நாளில் 95 வழக்குகளை விசாரித்து முடித்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் ஸ்வதந்தர் குமார்.












Click it and Unblock the Notifications