இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 121 தமிழ்ப் பெண்களுக்கு என்ன நடந்தது? மருத்துவமனையில் திடீர் அனும

கிளிநொச்சியில் உள்ள இலங்கை ராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6-வது பட்டாலியனில் தமிழ்ப் பெண்கள் அண்மையில் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களில் 21 பேர் திடீரென மருத்துவமனையில் நள்ளிரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் இப்பெண்களை குடும்பத்தினரும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ராணுவத்தில் இணைக்கப்பட்ட 6 பெண்கள்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் வணிகசூரிய கூறியிருக்கிறார்.
ஆனால் 21 தமிழ்ப் பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அனைவரும் அதிர்ச்சியடைந்து போனவர்களாக இருக்கின்றனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்தப் பெண்கள் ஏன் இரவோடு இரவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்பது பற்றி இலங்கை அரசுத் தரப்பில் விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications