400 கிலோ தங்கம் மோசடி- சென்னை 'சுரானா' நிறுவனத்தில் சிபிஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டை அதிரவைத்த 400 கிலோ தங்கம் மோசடி தொடர்பாக சென்னை சுரானா நிறுவனத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மத்திய அரசின் தங்க இறக்குமதி நிறுவன அதிகாரிகள் உதவியுடன் சென்னை சவுகார்பேட்டையில் இயங்கி வரும் சுரானா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த மத்திய அரசின் உலோக வணிகக் கழகத்தின் அதிகாரிகளும் சிக்கினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 400 கிலோ தங்கம் வழக்கில் இன்று திடீரென மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் சிக்கியது என்ன என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications