காவிரி நீர் கோரி தமிழகத்தில் தொடரும் போராட்டங்கள்
திருச்சி: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தி திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் போராட்டம் நடைபெற்றது.
காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததால் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது. தற்போது சம்பா சாகுபடியும் கருகி வருகிறது. காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் கர்நாடகா அலட்சியம் காட்டி வருகிறது. தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது.
இதனிடையே காவிரி டெல்டா விசாயிகள் 6பேர் தற்கொலைசெய்து கொள்ளவும் நேரிட்டது. இந்நிலையில் பாரதிய கியான் விகாஸ் சங்கத்தினர் திருச்சியில் காவிரி நீரைக் கோரி ரயில் மறியல் போராட்டத்தையும் அரை நிர்வாணப் போராட்டடத்தையும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் காவிரி நீர் கோரி நாகப்பட்டினத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
மேலும் வரும் 21-ந் தேதியன்று காவிரி டெல்டா பகுதிகளில் பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications