கருணாநிதி-விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்- விசாரணைக்கு கோர்ட் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.

தமிழக அமைச்சர்களைப் பற்றி திமுகவின் நாளிதழான முரசொலியில் விமர்சித்திருந்தார் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசினார் என்று விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமையன்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி தனித் தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இரண்டு அவதூறு வழக்குகளில் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+