நிலமோசடி: அழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபியை தூக்கியது போலீஸ்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு கிரானைட் வழக்கில் ஒருவழியாக முன் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் அழகிரியை சும்மா விடுவதில்லை என்று நினைத்திருக்கிறது மதுரை போலீஸ். இப்பொழுது அழகிரியின் வலது கரமான எஸ்.ஆர். கோபியை இன்றே தூக்கி சிறையில் போட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த உடனேயே மதுரையை ஆட்டுவித்த எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் எனப் பலரும் கம்பி எண்ணிவிட்டு குண்டாஸ் 'பார்த்து'விட்டு வெளியே வந்தனர். மதுரைவாசிகளும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தனர்.
இந்நிலையில் நிலமோசடி புகார் தொடர்பாக இன்று காலை எஸ்.ஆர். கோபியை மதுரை திருநகர் போலீசார் வரவழைத்திருந்தனர்.
இன்று காலை அழைத்துச் செல்லப்பட்ட கோபியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நிலமோசடி வழக்கில் எஸ்.ஆர். கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பவும் குண்டா'ஸே'தானா?












Click it and Unblock the Notifications