தர்மபுரியில் தொடரும் பதற்றம்: 144 தடை உத்தரவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கலப்பு திருமணத்தால் தலித் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிப்பதால் 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயில் சாதி மாறி கலப்பு திருமணம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலித்துகளின் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இச்சம்பவத்தைத் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பல இடங்களில்கல்வீச்சு சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.
இதனால் பதற்றமான 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications