தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன இந்திய கடற்படை!
Subscribe to Oneindia Tamil

இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சித்திரவதைகளை கண்ணீரோடு கூறியதுடன் இந்திய கடற்படையினரின் அட்டூழியத்தையும் அம்பலப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினர் தங்களை அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர். சிறைச்சாலையிலும் தாக்கினர். நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போது சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர் என்று குமுறலைக் கொட்டினர் அவர்கள்.
மேலும் இந்திய கடலோர காவல் படையினர் தங்களை அழைத்து வரும் போது கழிவறை மற்றும் கப்பல் கண்ணாடிகளை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மீனவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
இந்திய கடற்படையினரின் அட்டூழியம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications