அமெரிக்க துப்பாக்கிச் சூடு: உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 27 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், நியூயார்க் மேயருக்கு அனுப்பிய செய்தியில், இதுபோன்ற துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க ஒபாமாவை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோல் இந்திய அரசும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது.
மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிகள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நெருக்கடியும் ஒபாமாவுக்கு உருவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications