டாஸ்மாக் கடைகளுக்கு 'பூட்டு' போராட்டம்- பாமகவினர் முன்னெச்சரிக்கையாக கைது
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னையில் டாக்டர் ராமதாஸும் விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸும் சேலத்தில் ஜி.கே. மணியும் இப்போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்
இதைத் தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நள்ளிரவில் பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அம்பத்தூரில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் கே.என்.சேகர், மாநில துணை பொதுச்செயலாளர் மதுராந்தகம் கங்காதரன், அம்பத்தூர் நகர செயலாளர் சந்தானம், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வன்னியர் சங்க தலைவர் ராதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications